'பாரம்' படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் - இயக்குநர் வெற்றிமாறன்
2019ஆம் ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது இயக்குநர் ப்ரியா கிருஷ்ணன் இயக்கிய பாரம் திரைப்படம். இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'காக்கா முட்டை', 'விசாரணை' படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், இயக்குநர் ராம்தான் இந்தப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். எஸ் பி சினிமாவிற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். திரையரங்குகளில் எந்தளவிற்கு ஒரு படம் ஓடுகிறது என்பதைப் பொறுத்தே படத்தின் வெற்றி அமைகிறது, இதுதான் தமிழ் சினிமாவின் பலமும் பலவீனமும். 'பாரம்' படத்தில் 83 புதுமுகங்கள் நடித்துள்ளனர். படம் விருது வாங்கியவுடனே நிறைய விமர்சனங்களையும் சந்தித்தது. 'காக்கா முட்டை', 'விசாரணை', 'பாரம்' போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற ஊடகங்களின் ஆதரவுதான் முதலில் அவசியம் என்றார்.