‘மாற்றம் வராது, மண்ணாங்கட்டிதான் வரும்’ - இயக்குநர் சேரன் - மழையில் சிவந்த மருதாணி ஒலிப்புத்தக வெளியீட்டு விழா
🎬 Watch Now: Feature Video

கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய ‘மழையில் சிவந்த மருதாணி’ ஒலிப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கவிஞர் இந்துமதியை பாராட்டிய சேரன் ரசிப்புத் தன்மை குறித்தும் தமிழ் ஊடகங்கள் எப்படி தமிழை பிழையோடு உபயோகிக்கின்றன, மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.