பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு! - கோவை மாவட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 26, 2023, 10:24 AM IST

ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையானது 105 அடி கொள்ளளவு கொண்டது. இது முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதியில் உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூலை26) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7,219 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நீர்மட்டம் 81.44 அடியாகவும், நீர் இருப்பு 16.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. 

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.