Video: அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்! - சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே பேருந்து சென்றபோது காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே பேருந்தை வழிமறித்து நின்றது. இதை கண்ட ஓட்டுநர் பேருந்தை இயக்காமல் நிறுத்தினார். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST