Video: நெடுஞ்சாலையோரத்தில் புள்ளிமானை வேட்டையாடி உண்ணும் செந்நாய்கள் - புள்ளிமானை வேட்டையாடிய செந்நாய்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 15, 2022, 10:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்டப் பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. பவானிசாகர், தலமலை, ஆசனூர், தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள் வேட்டையாடி இறைச்சியை உண்டது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அண்மையில் பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. அங்கு புற்கள் சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் வேட்டையாடி வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.