வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - entertainment

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 30, 2023, 3:52 PM IST

தேனி: சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இன்று (30.07.2023) சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பொய்த்துப் போனது. நாள்தோறும் கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை போன்று, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிக்கு வரும் நீர் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு மக்கள் வந்து உள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் காலை முதல் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் குறைந்த அளவில் அருவியில் நீர் வருவதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து செல்கின்றனர். மேலும் அருவியில் காத்திருந்து குளிக்கும் நிலை ஏற்பட்டதால் அருவிக்கு மேல் பகுதியில் உள்ள தேங்கி இருக்கும் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் மழை பொய்த்து போனால் வரும் 10 நாட்களில் அருவிக்கு வரும் நீர் வரத்து முற்றிலும் இல்லாத போகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.