ஈரோடு: மங்கி குல்லா அணிந்து கைவரிசை காட்டிய பைக் திருடர்கள் - வைரலாகும் சிசிடிவி! - இரு சக்கர வாகன திருட்டு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 12:19 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பனையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான கோகுல் குமார், பார்த்திபன் ஆகியோர் இரண்டு இருசக்கர வாகனங்களை வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் இவர்களது இருசக்கர வாகனங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடு போனது. 

இருசக்கர வாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் மங்கி குல்லா, முகமூடி அணிந்து, கையில் இரும்பு ராடுகளுடன் மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் பனையம்பள்ளி கிராமத்தின் தெருவிற்குள் நுழையும் மூன்று நபர்கள் வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு செல்கின்றனர். 

பின்னர் இரண்டு நபர்களின் இருசக்கர வாகன பூட்டை உடைத்து திருடிக் கொண்டு சாலையைக் கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இருச்சக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.