ஜம்புலிபுத்தூர் ஸ்ரீகதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

By

Published : May 7, 2023, 4:03 PM IST

thumbnail

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்த ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வியாழக்கிழமை (மே 4) தொடங்கி முதல்நாள் வடக்குத்தெருவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என கோஷத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். 

அப்போது பக்தர்கள் பக்தி பரவசமடைந்து வாழைப்பழங்கள், நாணயங்கள், பருத்தி, இனிப்பு பதார்த்தங்களை பொதுமக்கள் முன்பு வீசினர். பின்னர் கதலிநரசிங்கபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கதலிநரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியை சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: chithirai festival: விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதாரப் படங்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.