thumbnail

ரூ.50 லட்சம் செலவு.. 3 ஆண்டில் சேதமடைந்த தரைப்பாலம்.. கோவை மக்கள் குமுறல்!

By

Published : May 4, 2023, 7:42 AM IST

கோயம்புத்தூர்: கோவையில் கடந்த 10 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மதுக்கரை விநாயகர் கோயில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டது.

பின்னர் அதன் அருகே இருந்த மதுக்கரையில் இருந்து குரும்பபாளையம் செல்லும் தார் சாலையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடைய காரணம் என பொதுமக்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். 

இந்த தரைப்பாலம் அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது, இதனை அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.