பாமக நிகழ்ச்சியில் திடீரென சரிந்த மேடை - எகிறி குதித்து தப்பிய அன்புமணி! - நிகழ்ச்சியில் திடீரென சரிந்த மேடை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 5, 2023, 7:39 PM IST

Updated : Apr 5, 2023, 10:20 PM IST

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் கலந்து கொண்டு கட்சியினருடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று (ஏப்.05) சென்னை திரும்புவதற்காக சேலத்தில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டார்.

வழியில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு விழா நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏறியபோது மேடை திடீரென சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அன்புமணி ராமதாஸ், மேடை சரிவதை உணர்ந்ததும், மேடையில் இருந்து எகிறி குதித்து காயம் இன்றி தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் ஏறி பாமகவினர் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேச முயற்சி செய்தார். அப்போது, அவரை வரவேற்க தொண்டர்கள் ஏராளமானோர் மேடையில் ஏறி நின்றதால், மேடை பாரம் தாங்காமல் சரிந்துள்ளது. இந்தச் சம்பவம் பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் கீழே நின்று அன்புமணி ராமதாஸ் கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். இந்த மேடை சரிந்து விழுந்த விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி முடித்த அன்புமணி ராமதாஸ் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்; நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் உறுதி

Last Updated : Apr 5, 2023, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.