பூந்தமல்லியில் வற்றாத வெள்ளம்: ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி..நீர்மூழ்கி மின்மோட்டார்களை பயன்படுத்த உத்தரவு - Minister P Moorthy directs to
🎬 Watch Now: Feature Video


Published : Dec 12, 2023, 10:24 PM IST
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் கடந்த வாரங்களில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, பூந்தமல்லி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர் உள்ளிட்டப் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் இன்னும் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்களுக்காக மீன்வளத்துறை சார்பில் படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் படகு மூலமே வந்து செல்கின்றனர். மேலும், மழைநீரை விரைந்து அகற்ற பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அதிகாரிகளுடன் யமுனா நகர் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (டிச.12) ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர், அதிக திறன் கொண்ட ஐந்துக்கும் மேற்பட்ட நீர்மூழ்கி மின்மோட்டார்களை வைத்து குடியிறுப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து, அதிக திறன் கொண்ட கூடுதல் மின்மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, இன்னும் இரண்டு தினங்களில் தேங்கியுள்ள மழைநீரை முழுவதுமாக அகற்றப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சென்னை வெள்ளத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு" - மத்தியக் குழு!