Watch Video: கர்நாடகாவில் கழுத்தளவு நீரில் சடலத்தை தூக்கி சென்ற பொதுமக்கள் - கர்நாடகாவில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16051235-thumbnail-3x2-karnataka.jpg)
ஸ்ரீரங்கப்பட்ணாவில் கேஆர்எஸ் அணை திறக்கப்பட்டமையால் சாலையெங்கும் காவேரி ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மஹாதேவபூர் கிராமத்தில் நேற்று(ஆக 7) இறந்த சுமலோச்சனா எனும் பெண்மணியின் சடலத்தை அடித்துச் செல்லும் வெள்ளத்தில் உறவினர்கள் சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் பாலம் ஒன்றை கட்டித் தரவேண்டுமென கிராமத்து மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST