thumbnail

ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி..! - சகோதரர் சத்ய நாராயணா கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 7:11 PM IST

Updated : Sep 3, 2023, 7:34 PM IST

மதுரை: நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா இன்று (செப்.3) மதுரையில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் - ரஜினிகாந்த் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அது அரசியல் சந்திப்பல்ல என பதில் அளித்தார்.

பின்னர் ரஜினிகாந்த்திற்கு ஆளுநர் பதவி எதுவும் கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அது இறைவன் கையில் தான் உள்ளது என்றும், ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை, இருப்பினும் கிடைத்தால் வேண்டாம் என்பதற்கு இல்லை, வரட்டும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் ரஜினிக்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மதுரை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: குற்றம் செய்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய காவல்துறை.. மறுவாழ்வு காக்கிகளுக்கு குவியும் வாழ்த்து!

Last Updated : Sep 3, 2023, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.