இந்த கடையில் சுவை கொஞ்சம் அதிகமோ..? 19 முறையாக அதே கடைக்கு படையெடுத்த 'படையப்பா' யானை! - யானை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 8, 2023, 10:46 AM IST

தேனி: கேரள மாநிலம் மூணாறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படையப்பா காட்டு யானை பொதுமக்களை மிரட்டி அச்சத்தில் ஆழ்த்தியது. சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்து அச்சுறுத்துவதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்துவதும், நியாய விலை கடைகளை மற்றும் மளிகைக் கடைகளை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பொருட்களைத் சாப்பிட்டு வருவதும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படையப்பாவின் வேலையாக இருந்து வந்தது.

சமீப காலமாகப் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு வருகை தராமல் இருந்த படையப்பா, தற்போது மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. மூணாறு அருகே உள்ள சொக்க நாடு எஸ்டேட் பகுதியில் புண்ணிய வேல் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடைக்குள் இரவு நேரத்தில் வருகை தந்த படையப்பா, கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களைத் சாப்பிட்டு விட்டு சென்றது. 

மூன்று மாதங்களுக்கு முன்பு இதே கடையை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைத் சாப்பிட்டு விட்டுச் சென்ற படையப்பா தற்போது மூன்று மாதங்களுக்கு பிறகு அதே கடையைத் தேடி வந்து உணவுப் பொருட்களை சுவைத்துவிட்டுச் சென்று உள்ளது. 

இதுகுறித்து சொக்க நாடு எஸ்டேட் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் புண்ணிய வேல் கூறியதாவது, "தனது கடைக்கு இதுவரை 19 முறை படையப்பா வந்து கடையை உடைத்து பொருட்களை சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளது" எனக் கூறி உள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.