Video:லாரியை மறித்து கரும்புத்துண்டுகளை கைப்பற்றிய காட்டு யானை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்களை காட்டு யானைகள் வழிமறிப்பதும், தாக்குவதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 21) சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை காட்டு யானை ஒன்று வழிமறித்து கரும்புத்துண்டுகளை கைப்பற்றி உண்டது. இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் காட்டு யானையின் அருகே சென்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க முயன்றனர். சிறிது நேரம் கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத்துண்டுகளைப் பறித்து தின்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST