திருமலை கோயிலில் தரிசனம் செய்த துணைக் குடியரசுத் தலைவர்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10880347-59-10880347-1614932374338.jpg)
திருப்பதி: ஆந்திராவில் உள்ள திருமலை - திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலின் மஹா துவாரம் பகுதியில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அலுவலர்கள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர், வெங்கடாஜலபதியின் புகைப்படத்தை நிர்வாக அலுவலர் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.