கிறிஸ்துமஸ் வந்தாச்சு... கடை வீதிகளில் பொருட்கள் விற்பனை மும்முரம்!
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கிறிஸ்துமஸ் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் மரம், குடில்களுக்கு தேவையான பொருட்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பலவிதமான அலங்கார விளக்குகளும், அலங்கார பொருட்கள், வாழ்த்து அட்டைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.