ETV Bharat / sukhibhava

பிளேட்லெட் எண்ணிக்கை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கிறதா?

author img

By

Published : Feb 24, 2023, 3:20 PM IST

ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது, உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Increase
Increase

ஹைதராபாத்: ரத்த தட்டை அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள், ரத்தத்தின் முக்கிய கூறாக விளங்குகின்றன. விபத்துகள் போன்ற ஆபத்தான நேரங்களில் ரத்தத்தை உறைய வைக்க இந்த பிளேட்லெட்டுகள் உதவுகின்றன. உடலின் ஆரோக்கியத்திற்கு இந்த பிளேட்லெட்டுகள் மிகவும் முக்கியம்.

இந்த நிலையில், உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) என்று கூறுகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த ஹீமாட்டாலஜிஸ்ட்டான மருத்துவர் ஆர்.எஸ்.பாட்டீல், இந்த பிளட் டிஸ்ஆர்டர்கள் தொடர்பாக விளக்கினார். அவர் கூறும்போது, "பொதுவாக, ஒரு ஆரோக்கியமான நபரின் ரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு 1,50,000 முதல் 4,50,000 பிளேட்லெட்டுகள் இருக்கும். இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இந்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவ இருந்தால், அது பிளட் டிஸ்ஆர்டர்.

ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை 'த்ரோம்போசைட்டோசிஸ்' என்றும், பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாக இருந்தால், அது 'த்ரோம்போசைட்டோபீனியா' என்றும் அழைக்கப்படுகிறது.

த்ரோம்போசைட்டோசிஸ்: ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும், அதனால் ரத்தத்தில் கட்டிகள் உருவாகும். இதனால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ரத்த சோகை, உடல் அழற்சி, சிறுநீரக கோளாறுகள், அறுவை சிகிச்சை, சில மருந்துகளாலும் த்ரோம்போசைட்டோசிஸ் ஏற்படலாம். வயது மூப்பு காரணமாகவும் இந்த நிலை ஏற்படக்கூடும். இந்த பிரச்னை பொதுவாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.

த்ரோம்போசைட்டோசிஸின் அறிகுறிகள்:

  • தலைவலி
  • உடல் பலவீனமாக உணர்தல்
  • மூக்கு, வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு
  • சீரற்ற ரத்த அழுத்தம்
  • தோல் அரிப்பு
  • கை, கால்களில் வலி அல்லது வீக்கம்
  • மனக்குழப்பம்
  • நெஞ்சுவலி
  • மூச்சுத்திணறல்

த்ரோம்போசைட்டோபீனியா:

ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட குறைந்தால், அது த்ரோம்போசைட்டோபீனியா என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் தொற்றுகள், ரத்த சோகை, கீமோதெரபி உள்ளிட்ட சில சிகிச்சைகள், அதிகளவு மது குடிப்பது, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு போன்ற காரணங்களால் இந்த த்ரோம்போசைட்டோபீனியா ஏற்படலாம். மரபணு காரணங்களாலும் இந்த நிலை ஏற்படக்கூடும். இந்த நிலை பொதுவாக கர்ப்பிணிகளிடம் காணப்படுகிறது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு இந்த நிலை தானாக குணமடைகிறது.

த்ரோம்போசைட்டோபீனியாவின் அறிகுறிகள்:

  • காயம் ஏற்பட்டால் அதிகளவு ரத்தம் வெளியேறுதல்
  • மூக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு
  • மலம் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது
  • உடல் சோர்வு
  • மலக்குடல் உள்ளிட்ட உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு

இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா: இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா என்பது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட மோசமான நிலை. இது ஆட்டோ இம்யூன் நோயாக இருப்பதால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இந்த நிலை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மோசமாக பாதிக்கும். இது அக்யூட் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் க்ரானிக் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா என இரு வகைப்படும்.

அக்யூட் வகை குழந்தைகளிடமும், க்ரானிக் வகை பெரியவர்களிடமும் காணப்படும். இந்த நிலையால் ஆண்களை விட பெண்களுக்குப் பாதிப்பு அதிகம். ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் சி மற்றும் ஹெச் போன்ற வைரஸ் தொற்றுகளாலும், சில பாக்டீரியா தொற்றுகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சியில் உள்ளதா?

ஹைதராபாத்: ரத்த தட்டை அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள், ரத்தத்தின் முக்கிய கூறாக விளங்குகின்றன. விபத்துகள் போன்ற ஆபத்தான நேரங்களில் ரத்தத்தை உறைய வைக்க இந்த பிளேட்லெட்டுகள் உதவுகின்றன. உடலின் ஆரோக்கியத்திற்கு இந்த பிளேட்லெட்டுகள் மிகவும் முக்கியம்.

இந்த நிலையில், உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) என்று கூறுகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த ஹீமாட்டாலஜிஸ்ட்டான மருத்துவர் ஆர்.எஸ்.பாட்டீல், இந்த பிளட் டிஸ்ஆர்டர்கள் தொடர்பாக விளக்கினார். அவர் கூறும்போது, "பொதுவாக, ஒரு ஆரோக்கியமான நபரின் ரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு 1,50,000 முதல் 4,50,000 பிளேட்லெட்டுகள் இருக்கும். இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இந்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவ இருந்தால், அது பிளட் டிஸ்ஆர்டர்.

ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை 'த்ரோம்போசைட்டோசிஸ்' என்றும், பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாக இருந்தால், அது 'த்ரோம்போசைட்டோபீனியா' என்றும் அழைக்கப்படுகிறது.

த்ரோம்போசைட்டோசிஸ்: ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும், அதனால் ரத்தத்தில் கட்டிகள் உருவாகும். இதனால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ரத்த சோகை, உடல் அழற்சி, சிறுநீரக கோளாறுகள், அறுவை சிகிச்சை, சில மருந்துகளாலும் த்ரோம்போசைட்டோசிஸ் ஏற்படலாம். வயது மூப்பு காரணமாகவும் இந்த நிலை ஏற்படக்கூடும். இந்த பிரச்னை பொதுவாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.

த்ரோம்போசைட்டோசிஸின் அறிகுறிகள்:

  • தலைவலி
  • உடல் பலவீனமாக உணர்தல்
  • மூக்கு, வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு
  • சீரற்ற ரத்த அழுத்தம்
  • தோல் அரிப்பு
  • கை, கால்களில் வலி அல்லது வீக்கம்
  • மனக்குழப்பம்
  • நெஞ்சுவலி
  • மூச்சுத்திணறல்

த்ரோம்போசைட்டோபீனியா:

ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இயல்பை விட குறைந்தால், அது த்ரோம்போசைட்டோபீனியா என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் தொற்றுகள், ரத்த சோகை, கீமோதெரபி உள்ளிட்ட சில சிகிச்சைகள், அதிகளவு மது குடிப்பது, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு போன்ற காரணங்களால் இந்த த்ரோம்போசைட்டோபீனியா ஏற்படலாம். மரபணு காரணங்களாலும் இந்த நிலை ஏற்படக்கூடும். இந்த நிலை பொதுவாக கர்ப்பிணிகளிடம் காணப்படுகிறது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு இந்த நிலை தானாக குணமடைகிறது.

த்ரோம்போசைட்டோபீனியாவின் அறிகுறிகள்:

  • காயம் ஏற்பட்டால் அதிகளவு ரத்தம் வெளியேறுதல்
  • மூக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு
  • மலம் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது
  • உடல் சோர்வு
  • மலக்குடல் உள்ளிட்ட உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு

இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா: இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா என்பது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட மோசமான நிலை. இது ஆட்டோ இம்யூன் நோயாக இருப்பதால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இந்த நிலை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மோசமாக பாதிக்கும். இது அக்யூட் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் க்ரானிக் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா என இரு வகைப்படும்.

அக்யூட் வகை குழந்தைகளிடமும், க்ரானிக் வகை பெரியவர்களிடமும் காணப்படும். இந்த நிலையால் ஆண்களை விட பெண்களுக்குப் பாதிப்பு அதிகம். ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் சி மற்றும் ஹெச் போன்ற வைரஸ் தொற்றுகளாலும், சில பாக்டீரியா தொற்றுகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சியில் உள்ளதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.