விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
விருதுநகரில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு போன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை சரகம் காவல் துறை துணை தலைவர் காமினி தேர்வினை பார்வையிட்டார்.
இந்த தேர்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் செய்திருந்தார். இந்நிலையில், இத்தேர்வில் கலந்துகொள்ள விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து (21) என்ற இளைஞர் வந்திருந்தார்.
![f](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12578812_deatg.jpg)