ETV Bharat / state

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 963 பேர் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைப்பு!

author img

By

Published : Jun 15, 2020, 1:15 AM IST

விருதுநகர்: ஒடிசாவைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 963 பேர் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

இந்தியா முழுவதும் கடந்த 60 நாள்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டங்களாக 1,600க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பிகார், உத்தரப் பிரதேசம், பாட்னா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நான்காம் கட்டமாக தனியார் ஆலைகள், சாலையோரம் வியாபாரம் செய்து வந்த தென்மண்டலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விருதுநகரில் 308, திண்டுக்கலில் 44, ராமநாதபுரத்தில் 293, சிவகங்கையில் 20, தூத்துக்குடியில் 86, கன்னியாகுமரியில் 84, மேலும் திருநெல்வேலி, மதுரை உள்பட மொத்தமாக ஒடிசாவைச் சேர்ந்த 963 குடிபெயர்ந் தொழிலாளர்கள் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக இத்தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ரயில் பாதைக்காக வெடி வைத்ததில் கோயில் காவலாளி உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் கடந்த 60 நாள்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டங்களாக 1,600க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பிகார், உத்தரப் பிரதேசம், பாட்னா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நான்காம் கட்டமாக தனியார் ஆலைகள், சாலையோரம் வியாபாரம் செய்து வந்த தென்மண்டலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விருதுநகரில் 308, திண்டுக்கலில் 44, ராமநாதபுரத்தில் 293, சிவகங்கையில் 20, தூத்துக்குடியில் 86, கன்னியாகுமரியில் 84, மேலும் திருநெல்வேலி, மதுரை உள்பட மொத்தமாக ஒடிசாவைச் சேர்ந்த 963 குடிபெயர்ந் தொழிலாளர்கள் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக இத்தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ரயில் பாதைக்காக வெடி வைத்ததில் கோயில் காவலாளி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.