விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இங்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோயிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நேற்று அமாவாசை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.