ETV Bharat / state

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: மாணவர்கள் அசத்தல் - silampam competion

விருதுநகர்: சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில்  600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமாக பங்கேற்று பரிசுகளை வென்றனர்.

silampam
author img

By

Published : Jul 29, 2019, 7:07 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 620 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில், 4 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு உடல் எடைகளின் அடிப்படையில் 90 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றை கம்பு வீச்சு, கம்பு சண்டை, இரட்டை கம்பு வீச்சு, வாள் வீச்சு, வேல் கம்பு, சுருள் வீச்சு உள்ளிட்ட திறன்களின் கீழ் போட்டிகள் நடந்தது.

சிலம்பம் போட்டி

இந்தப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த லீ மார்ட்டியல் அகாடமி அணி முதல் இடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை விருதுநகர் தமிழன் சிலம்பாட்ட கழக அணியும், தேனியைச் சேர்ந்த வாழும் கலைக்கூட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 620 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில், 4 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு உடல் எடைகளின் அடிப்படையில் 90 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றை கம்பு வீச்சு, கம்பு சண்டை, இரட்டை கம்பு வீச்சு, வாள் வீச்சு, வேல் கம்பு, சுருள் வீச்சு உள்ளிட்ட திறன்களின் கீழ் போட்டிகள் நடந்தது.

சிலம்பம் போட்டி

இந்தப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த லீ மார்ட்டியல் அகாடமி அணி முதல் இடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை விருதுநகர் தமிழன் சிலம்பாட்ட கழக அணியும், தேனியைச் சேர்ந்த வாழும் கலைக்கூட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Intro:விருதுநகர்
29-07-19

மாநில அளவிலான சிலம்பப் போட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது.
Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில்  600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆரவமுடன் பங்கேற்று  அசத்தல்.... குழு போட்டியில் விருதுநகர் மாவட்ட அணி பெற்றிபெற்றது...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த  620 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். 4 வயது முதல்  18வயது வரையில் உள்ள மாணவ மாணவியர் கலந்துகொண்ட இந்த போட்டியில் உடல் எடைகளில் அடிப்படையில் 90 பிரிவுகளாக தனித்திறன் மற்றும் குழு திறனாக போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒற்றை கம்பு வீச்சு, கம்பு சண்டை, இரட்டை கம்பு வீச்சு, வாழ் வீச்சு, வேல் கம்பு, சுருள் வீச்சு உள்ளிட்ட திறன்களின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவ மாணவியர் தங்களது நேர்த்தியான திறமைகளை வெளிப்படுத்தினர். குழு போட்டியில் சிவகாசியை சேர்ந்த லீ மார்ட்டியல் அகடாமி அணி வெற்றி பெற்றது, இரண்டாம் இடத்தை விருதுநகர் தமிழன் சிலம்பாட்ட கழக அணியும், 3ம் இடத்தை தேனியை சேர்ந்த வாழும் கலைக்கூட அணியும் பெற்று ரொக்க  பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இளம் மாணவ மாணவியர் அதிவேகத்தில் சிலம்பு சுற்றி அசத்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.