ETV Bharat / state

லாரி மோதிய விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 11, 2020, 6:57 PM IST

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதிய விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் உடல் சிதைந்து உயிரிழந்தார்.

உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
லாரி விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது 4 நாள்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்த பிரதீஷ், விடுமுறை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது 4 நாள்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்த பிரதீஷ், விடுமுறை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.