ETV Bharat / state

'கருணாநிதியாலேயே செய்யமுடியல ஸ்டாலின் செஞ்சிடுவாரா என்ன?' - ரகளைய தொடங்கிய ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Sep 18, 2019, 12:08 PM IST

விருதுநகர்: அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

"கருணாநிதி தான் எழுதிய கட்டுரையில் தலையங்கமாக பெரியார் ஆணையிடுகிறார், அண்ணா ஊழையிடுகிறார் என வைத்தார். இப்படி அண்ணாவை இழிவுபடுத்திய திமுகவுக்கு அண்ணா பிறந்தநாள் கொண்டாடத் தகுதியில்லை.

அதிமுகவை 46 ஆண்டுகளாக கருணாநிதி அழிக்க நினைத்தார், இப்போது அவரது மகன் ஸ்டாலின் அழிக்க நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவோடு அதிமுக வெற்றிபெறும்.

வேலூரில் அதிமுகவிற்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்வி, திமுகவுக்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்தான் திமுக கட்சியில் இணைந்துள்ளனர். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் திமுகவின் பக்கம் போகமாட்டார்கள். அதிமுக சாமானிய தொண்டர்களையும் கோட்டையில் அமர்த்தக்கூடிய கட்சி" என்று கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மேலும், "அதிமுக அரசு மக்களுக்கு கணக்கு கொடுப்போம், திமுகவிற்கு எதுக்கு கணக்கு கொடுக்க வேண்டும், ஸ்டாலினுக்கு எதுக்கு வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை கொடுக்கணும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். பெட்டிசன் போட்டு பிழைக்கிற கூட்டம் திமுக கூட்டம்" என்றார்.

'அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 20 பேரை திமுக விலைக்கு வாங்கினால் நாங்கள் திமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்' என்ற புதிய குண்டை போட்டு மீண்டும் தனது ரகளையை தொடங்கியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.

அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

"கருணாநிதி தான் எழுதிய கட்டுரையில் தலையங்கமாக பெரியார் ஆணையிடுகிறார், அண்ணா ஊழையிடுகிறார் என வைத்தார். இப்படி அண்ணாவை இழிவுபடுத்திய திமுகவுக்கு அண்ணா பிறந்தநாள் கொண்டாடத் தகுதியில்லை.

அதிமுகவை 46 ஆண்டுகளாக கருணாநிதி அழிக்க நினைத்தார், இப்போது அவரது மகன் ஸ்டாலின் அழிக்க நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவோடு அதிமுக வெற்றிபெறும்.

வேலூரில் அதிமுகவிற்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்வி, திமுகவுக்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்தான் திமுக கட்சியில் இணைந்துள்ளனர். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் திமுகவின் பக்கம் போகமாட்டார்கள். அதிமுக சாமானிய தொண்டர்களையும் கோட்டையில் அமர்த்தக்கூடிய கட்சி" என்று கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மேலும், "அதிமுக அரசு மக்களுக்கு கணக்கு கொடுப்போம், திமுகவிற்கு எதுக்கு கணக்கு கொடுக்க வேண்டும், ஸ்டாலினுக்கு எதுக்கு வெள்ளை அறிக்கை, மஞ்சள் அறிக்கை கொடுக்கணும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். பெட்டிசன் போட்டு பிழைக்கிற கூட்டம் திமுக கூட்டம்" என்றார்.

'அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 20 பேரை திமுக விலைக்கு வாங்கினால் நாங்கள் திமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்' என்ற புதிய குண்டை போட்டு மீண்டும் தனது ரகளையை தொடங்கியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.

Intro:விருதுநகர்
18-09-19

ஸ்டாலின் உங்க ஐயாவாலேயே முடியல நீ எல்லாம் எங்களுக்கு குஞ்சு - ஸ்டாலினை வசைபாடினார் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tn_vnr_01_rajenthira_balaji_speech_vis_script_7204885Body:கலைஞர் அழிக்க நினைத்த அதிமுகவை இப்போது அவரது மகன் ஸ்டாலின் அழிக்க நினைக்கிறார். அது ஒ௫போதும் நடக்காது என்றார். உங்க ஐயாவாலேயே முடியல நீ எல்லாம் எங்களுக்கு குஞ்சு என்று வட்டார மொழியில் ஸ்டாலினை வசைபாடினார் - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் அறிஞர் அண்ணா 111 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேசபந்து மைதானத்தில் பால் வளத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலஜி தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலஜி பேசியதாவது. க௫ணாநிதி தான் எழுதிய கட்டுரையில் தலையங்கமாக பெரியார் ஆணையிடுகிறார்: அண்ணா ஊழையிடுகிறார் என வைத்தார். இப்படி அண்ணாவை இழிவு படுத்திய திமுகவுக்கு அண்ணா பிறந்தநாள் கொண்டாட தகுதியில்லை. அதிமுகவை 46 ஆண்டுகளாக கலைஞர் அழிக்க நினைத்தார் இப்போது அவரது மகன் ஸ்டாலின் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அது ஒ௫போதும் நடக்காது என்றார். உங்க ஐயாவாலேயே முடியல நீ எல்லாம் எங்களுக்கு குஞ்சு என்று வட்டார மொழியில் வசைபாடினார். நாங்குநேரி மற்றும் விக்கிரபாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவோம். எடப்பாடி. ஓ.பி.எஸ். இருவரும் சேர்ந்து ஆட்சியை வழி நடத்திவருகிறார்கள். ஸ்டாலின் ஒப்பாரி வைக்கிறார். திமுக கரர்களே ஸ்டாலினுக்கு லூசு பிடித்து விட்டது என்று கூறுகிறார்கள். வேலூரில் அதிமுகவிற்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்விதான். திமுகவுக்கு கிடைத்து தோல்வி கரமான வெற்றி. எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தான் திமுக கட்சியில் இணைந்தார் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் திமுகவின் பக்கம் போகமாட்டார்கள். பிறக்கும்போது அண்ணா கொடியுடன் பிறக்க கூடிய கட்சி அதிமுகத்தான். மக்களுக்கு கணக்கு கொடுப்போம் உனக்கு எதுக்கு கணக்கு வேண்டும் உனக்கு எதுக்கு வெள்ளை அறிக்கை மஞ்சள் அறிக்கை கொடுப்போம். பெட்டிசன் போட்டு பிழைக்கிற கூட்டம் திமுக கூட்டம். நாங்கள் எங்கள் செயல்பாட்டை கட்டினால் உங்கள் கட்சி சுக்கு நூறாக போய்விடும். அதிமுக சாமானிய தொண்டர்களையும் கோட்டையில் அமர்த்தகூடிய கட்சி. திமுக அப்படியில்லை. திமுக அதிமுக எம்.எல். ஏ க்கள் 20 பேரை விலைக்கு வாங்கினால் நாங்கள் திமுக எம்.எல்.ஏ க்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.