ETV Bharat / state

மினி லாரி மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 8, 2020, 8:11 PM IST

Updated : Oct 8, 2020, 11:35 PM IST

விருதுநகர்: சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் மீது மினி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவன்
பள்ளி மாணவன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அம்பேத்கர் காலனியில் வசிக்கும் ராஜபாண்டியின் மகன் விஷ்வா (10). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்றார். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரே பந்தல்குடி சாலையில் இவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே குடிநீர் ஏற்றி வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பள்ளி மாணவன் விஷ்வாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநர் சீனி என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அம்பேத்கர் காலனியில் வசிக்கும் ராஜபாண்டியின் மகன் விஷ்வா (10). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்றார். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரே பந்தல்குடி சாலையில் இவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே குடிநீர் ஏற்றி வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பள்ளி மாணவன் விஷ்வாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநர் சீனி என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு!

Last Updated : Oct 8, 2020, 11:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.