ETV Bharat / state

சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உதவியுடன் சொந்த ஊர் திரும்பிய குடும்பம்!

author img

By

Published : May 12, 2020, 5:22 PM IST

விருதுநகர்: ஊரடங்கினால் சாத்தூர் பகுதியில் சிக்கித் தவித்த குடும்பத்தினர் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

சாத்தூர் எம்எல்ஏ உதவி  சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன்  satur mla help  satur MLA rajavarman helped  சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்
சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உதவியுடன் சொந்த ஊர் திரும்பிய குடும்பம்

சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியிலுள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாடத்தியம்மாள்(53), தனது குடும்பத்துடன் தென்காசி-குருவிகுளத்திலுள்ள தங்களது குலதெய்வக் கோயிலான முத்துமாரியம்மன் கோயிலுக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி நேர்த்திக் கடன் செலுத்த சென்றுள்ளனர்.

144 தடை உத்தரவை அறியாமல் சென்ற இவர்கள், கோயில் மூடப்பட்டு இருந்ததால் திகைத்து நின்றுள்ளார். பின்னர், தங்களது உறவினரைத் தொடர்புக்கொண்டு சாத்தூர் வந்துள்ளனர்.

கையிலிருந்த பணத்தை வைத்து பத்து நாட்கள் கழித்து, செய்வதறியாது திகைத்த இவர்கள் குறித்து அக்கம்பக்கத்தினர் வாட்ஸ்-ஆப் மூலம் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர் ஏற்படுத்திக்கொடுத்தார்.

சாத்தூர் எம்எல்ஏ உதவி  சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன்  satur mla help  satur MLA rajavarman helped  சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்
சாத்தூரில் சிக்கித் தவித்த மாடத்தியம்மாள் குடும்பம்

பின்பு மாவட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு மாடத்தியம்மாள், அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல துரித நடவடிக்கை எடுத்தார். அதன்படி, இன்று மாடத்தியம்மாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தஞ்சை நெட்டி, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!

சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியிலுள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாடத்தியம்மாள்(53), தனது குடும்பத்துடன் தென்காசி-குருவிகுளத்திலுள்ள தங்களது குலதெய்வக் கோயிலான முத்துமாரியம்மன் கோயிலுக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி நேர்த்திக் கடன் செலுத்த சென்றுள்ளனர்.

144 தடை உத்தரவை அறியாமல் சென்ற இவர்கள், கோயில் மூடப்பட்டு இருந்ததால் திகைத்து நின்றுள்ளார். பின்னர், தங்களது உறவினரைத் தொடர்புக்கொண்டு சாத்தூர் வந்துள்ளனர்.

கையிலிருந்த பணத்தை வைத்து பத்து நாட்கள் கழித்து, செய்வதறியாது திகைத்த இவர்கள் குறித்து அக்கம்பக்கத்தினர் வாட்ஸ்-ஆப் மூலம் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர் ஏற்படுத்திக்கொடுத்தார்.

சாத்தூர் எம்எல்ஏ உதவி  சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன்  satur mla help  satur MLA rajavarman helped  சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்
சாத்தூரில் சிக்கித் தவித்த மாடத்தியம்மாள் குடும்பம்

பின்பு மாவட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு மாடத்தியம்மாள், அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல துரித நடவடிக்கை எடுத்தார். அதன்படி, இன்று மாடத்தியம்மாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தஞ்சை நெட்டி, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.