ETV Bharat / state

மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை

author img

By

Published : Mar 19, 2020, 3:03 PM IST

விருதுநகர்: மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடியை, நண்பர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை
மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுட்டிவார்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பொங்கல் (எ) முத்துக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருத்தங்கல் வண்ணார்குளம் பகுதியில், இவரது நண்பர்கள் ஐந்து பேர் மது அருந்தி கொண்டிருந்த தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்றார். முத்துக்குமார் அவரது நண்பர்களிடம் மது வேண்டுமெனக் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், சலவை செய்யும் கற்கலால் அவரைத் தாக்கினர். இந்த தகராறு முற்றவே, முத்துக்குமார் வைத்திருந்த கத்தியாலேயே அவரைக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த திருத்தங்கல் காவல் துறையினர், உயிரிழந்து கிடந்த முத்துக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்துக்குமாரின் நண்பர்கள் தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் ஆதாயத்திற்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுட்டிவார்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பொங்கல் (எ) முத்துக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருத்தங்கல் வண்ணார்குளம் பகுதியில், இவரது நண்பர்கள் ஐந்து பேர் மது அருந்தி கொண்டிருந்த தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்றார். முத்துக்குமார் அவரது நண்பர்களிடம் மது வேண்டுமெனக் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், சலவை செய்யும் கற்கலால் அவரைத் தாக்கினர். இந்த தகராறு முற்றவே, முத்துக்குமார் வைத்திருந்த கத்தியாலேயே அவரைக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த திருத்தங்கல் காவல் துறையினர், உயிரிழந்து கிடந்த முத்துக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்துக்குமாரின் நண்பர்கள் தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் ஆதாயத்திற்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.