ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

author img

By

Published : Feb 23, 2021, 10:08 PM IST

விருதுநகர்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 787 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 700க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று (பிப்.22) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவேன் என்று அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று (பிப்.23) காலை மாவட்ட ஆட்சியர் கண்ணன் இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்த அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குவந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 787 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பாய் படுக்கையுடன் போராட வந்த அங்கன்வாடி ஊழியர்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 700க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று (பிப்.22) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவேன் என்று அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று (பிப்.23) காலை மாவட்ட ஆட்சியர் கண்ணன் இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்த அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குவந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 787 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பாய் படுக்கையுடன் போராட வந்த அங்கன்வாடி ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.