ETV Bharat / state

விருதுநகரில் 6 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jul 27, 2020, 7:37 PM IST

விருதுநகர்: இன்று ஒரே நாளில் 37 சிறுவர்கள் உள்பட 338 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 302ஆக உயர்ந்தது.

Corona damage exceeds 6,000 in the award city!
Corona damage exceeds 6,000 in the award city!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 5 ஆயிரத்து 964 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஜூலை 27) கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 37 சிறுவர்கள் உள்பட மேலும் 338 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 302ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இதுவரை 3 ஆயிரத்து 918 பேர் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 321 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 27) மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 5 ஆயிரத்து 964 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஜூலை 27) கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 37 சிறுவர்கள் உள்பட மேலும் 338 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 302ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இதுவரை 3 ஆயிரத்து 918 பேர் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 321 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 27) மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.