ETV Bharat / state

மனைவிக்கு பாலியல் தொல்லை - ரவுடியை கொலை செய்த சக நண்பர்கள் - villupuram rowdy gaja

விழுப்புரம்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

murder
murder
author img

By

Published : Feb 25, 2020, 10:20 AM IST

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா (எ) ராஜா (40). ரவுடியான இவர் விழுப்புரம் கணபதி நகரிலுள்ள, இவரின் சக நண்பரான லாலி கார்த்திக் என்பவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல் துறையினர், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா அவரது நண்பரான லாலி கார்த்திக் வீட்டுக்கு, அவர் இல்லாத நேரத்தில் வருவதும், அவரது மனைவியிடம் தகாத முறையில் பாலியல் ரீதியாக அவருக்குத் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர்கள்

இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த லாலி கார்த்திக், அவரின் மற்றொரு நண்பரான வினோத் என்பவருடன் சேர்ந்து ராஜாவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கார்த்திக், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சிக்கினான் சைக்கோ கொலையாளி' - காவல் துறை தீவிர விசாரணை!

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா (எ) ராஜா (40). ரவுடியான இவர் விழுப்புரம் கணபதி நகரிலுள்ள, இவரின் சக நண்பரான லாலி கார்த்திக் என்பவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல் துறையினர், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா அவரது நண்பரான லாலி கார்த்திக் வீட்டுக்கு, அவர் இல்லாத நேரத்தில் வருவதும், அவரது மனைவியிடம் தகாத முறையில் பாலியல் ரீதியாக அவருக்குத் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர்கள்

இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த லாலி கார்த்திக், அவரின் மற்றொரு நண்பரான வினோத் என்பவருடன் சேர்ந்து ராஜாவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கார்த்திக், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சிக்கினான் சைக்கோ கொலையாளி' - காவல் துறை தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.