ETV Bharat / state

இரவோடு இரவாக சுங்கக் கட்டணம் கிடுகிடு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! - விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் திடீர் கட்டண உயர்வு

விழுப்புரம் : எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் சுங்க்ச்சாவடி
author img

By

Published : Sep 3, 2019, 8:07 AM IST

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 490 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுதோறும் 10 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் மட்டும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலைகளை சீரமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எப்படி சரியாகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 490 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுதோறும் 10 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் மட்டும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலைகளை சீரமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எப்படி சரியாகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Intro:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.Body:நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு நிறுவியுள்ளது.

இவற்றில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும்சு ங்கச்சாவடிகளில் எவ்வித முன்னறிவிப்பின்றி நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Conclusion:சாலைகளை சீர் அமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எப்படி சரியாகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.