ETV Bharat / state

ஒன் டே ஹெச்எம் ஆன பள்ளி மாணவி..

author img

By

Published : Oct 28, 2022, 10:22 AM IST

விழுப்புரத்தில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஒன் டே ஹெச்எம் ஆன பள்ளி மாணவி..
ஒன் டே ஹெச்எம் ஆன பள்ளி மாணவி..

விழுப்புரம்: திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 4,000 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் பள்ளியில் நடந்த தமிழ்தாய் வாழ்த்து கூட்டத்தின்போது, “காலாண்டுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சிறப்பான பரிசு ஒன்று காத்திருக்கிறது. எனவே மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படியுங்கள்’ என தலைமையாசிரியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற காலாண்டுத் தேர்வின் முடிவில், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லோகிதா, 600-க்கு 581 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவி லோகிதாவை, நேற்று (அக் 27) தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பை வழங்கி உள்ளனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட மாணவி லோகிதா, ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு மையத்திற்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டார். பின்னர் மதிய உணவு இடைவேளை முடிந்து, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்று கண்காணித்தார்.

மேலும் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இவ்வாறு காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை மிகவும் திறம்பட செய்த மாணவி லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க: தேவையற்ற பொருள்களில் வண்ணங்கள் தீட்டி மதிப்பைக்கூட்டும் மாண்புமிகு மாணவி

விழுப்புரம்: திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 4,000 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் பள்ளியில் நடந்த தமிழ்தாய் வாழ்த்து கூட்டத்தின்போது, “காலாண்டுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சிறப்பான பரிசு ஒன்று காத்திருக்கிறது. எனவே மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படியுங்கள்’ என தலைமையாசிரியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற காலாண்டுத் தேர்வின் முடிவில், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லோகிதா, 600-க்கு 581 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவி லோகிதாவை, நேற்று (அக் 27) தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பை வழங்கி உள்ளனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட மாணவி லோகிதா, ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு மையத்திற்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டார். பின்னர் மதிய உணவு இடைவேளை முடிந்து, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்று கண்காணித்தார்.

மேலும் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இவ்வாறு காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை மிகவும் திறம்பட செய்த மாணவி லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க: தேவையற்ற பொருள்களில் வண்ணங்கள் தீட்டி மதிப்பைக்கூட்டும் மாண்புமிகு மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.