ETV Bharat / state

ஓய்வூதிய விண்ணப்பம்! புதிய முறை அறிமுகம்

author img

By

Published : Jul 11, 2020, 4:39 AM IST

விழுப்புரம்: முதியோர், கைம்பெண்கள்  உள்ளிட்ட எட்டு ஓய்வுதிய திட்டங்களுக்கு இனி இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் விண்ணப்பம்! புதிய முறை அறிமுகம்
ஓய்வூதியம் விண்ணப்பம்! புதிய முறை அறிமுகம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எட்டு ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து வட்ட - மாவட்ட அளவில் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் நேரடியாக பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பம் பெறுவதற்கான வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு மின்னாளுமை முகமையை, மாநில வருவாய்த் துறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, முதியோர், கைம்பெண்கள் உள்ளிட்ட எட்டு ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்-லைன் விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த மின் மாவட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இ-சேவை மையம் விண்ணப்ப வசதியை தொடர்ந்து பயன்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே, முதியோர், விதவைகள் உள்ளிட்ட எட்டு ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக பொதுமக்கள் யாரும் மனுக்களை அளிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாம்கோ கடன்பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எட்டு ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து வட்ட - மாவட்ட அளவில் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் நேரடியாக பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பம் பெறுவதற்கான வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு மின்னாளுமை முகமையை, மாநில வருவாய்த் துறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, முதியோர், கைம்பெண்கள் உள்ளிட்ட எட்டு ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்-லைன் விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த மின் மாவட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இ-சேவை மையம் விண்ணப்ப வசதியை தொடர்ந்து பயன்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே, முதியோர், விதவைகள் உள்ளிட்ட எட்டு ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக பொதுமக்கள் யாரும் மனுக்களை அளிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாம்கோ கடன்பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.