ETV Bharat / state

மூட்டை முடிச்சுடிச்சுகளுடன் விழுப்புரத்தில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! - புலம்பெயர் தொழிலாளர்கள்

விழுப்புரம்: ஒரிசா,பிகார் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப வழியின்றி மூட்டை முடிச்சுகளுடன் விழுப்புரத்தில் காத்திருக்கும் அவலம்..

விழுப்புரத்தில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
விழுப்புரத்தில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
author img

By

Published : Jun 4, 2020, 9:52 AM IST

ஊரடங்கு காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களாக கூலிவேலை செய்து வந்த 100 க்கும் மேற்ப்பட்ட புலம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்துள்ளனர்.

நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டதால்,அனைவரும் பேருந்து மூலம் நேற்று விழுப்புரம் வந்தடைந்தனர். பின்னர் தாங்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி மூட்டை, முடிச்சுகளுடன் ஒன்று கூடியுள்ளனர்.

விழுப்புரத்தில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இதனை கண்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் தங்களது வேதனைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனை விசாரித்த அதிகாரிகள் அடுத்துவரும் ரயில்களில் டிக்கெட் பதிவுசெய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.

இதை பற்றி அரசு அதிகாரிகள் கூறியபோது,இவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விழுப்புரம் வந்ததால் ரயில்களில் அனுப்பவதில் சிரமம் இருக்கும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!

ஊரடங்கு காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களாக கூலிவேலை செய்து வந்த 100 க்கும் மேற்ப்பட்ட புலம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்துள்ளனர்.

நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டதால்,அனைவரும் பேருந்து மூலம் நேற்று விழுப்புரம் வந்தடைந்தனர். பின்னர் தாங்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி மூட்டை, முடிச்சுகளுடன் ஒன்று கூடியுள்ளனர்.

விழுப்புரத்தில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இதனை கண்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் தங்களது வேதனைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனை விசாரித்த அதிகாரிகள் அடுத்துவரும் ரயில்களில் டிக்கெட் பதிவுசெய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.

இதை பற்றி அரசு அதிகாரிகள் கூறியபோது,இவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விழுப்புரம் வந்ததால் ரயில்களில் அனுப்பவதில் சிரமம் இருக்கும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.