ETV Bharat / state

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

author img

By

Published : Dec 28, 2019, 8:47 PM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு
ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார், லதா தம்பதியினர். இவர்களுக்கு அபிராமி(13), திவ்யா(10), ஆனந்த்(7) என மூன்று குழந்தைகள் உள்ளனர். அசோக்குமார் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு சென்ற நிலையில், லதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மூக்கனூர் ஏரி அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு லதா விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அபிராமி, திவ்யா, ஆனந்த் ஆகிய மூவரும் அருகில் உள்ள ஏரியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அபிராமியும், திவ்யாவும் ஆழமான பகுதிக்குச் சென்றதால், மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் முழ்கியுள்ளனர்.

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

இதைக் கண்ட ஆனந்த் கூச்சலிட்டதையடுத்து லதா, ஏரி அருகே இருந்த இளைஞர்களை அழைத்து காப்பாற்றும்படி கூறியுள்ளார். உடனே ஏரியில் குதித்த இளைஞர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். ஆனால் பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தஞ்சையில் மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார், லதா தம்பதியினர். இவர்களுக்கு அபிராமி(13), திவ்யா(10), ஆனந்த்(7) என மூன்று குழந்தைகள் உள்ளனர். அசோக்குமார் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு சென்ற நிலையில், லதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மூக்கனூர் ஏரி அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு லதா விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அபிராமி, திவ்யா, ஆனந்த் ஆகிய மூவரும் அருகில் உள்ள ஏரியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அபிராமியும், திவ்யாவும் ஆழமான பகுதிக்குச் சென்றதால், மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் முழ்கியுள்ளனர்.

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

இதைக் கண்ட ஆனந்த் கூச்சலிட்டதையடுத்து லதா, ஏரி அருகே இருந்த இளைஞர்களை அழைத்து காப்பாற்றும்படி கூறியுள்ளார். உடனே ஏரியில் குதித்த இளைஞர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். ஆனால் பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தஞ்சையில் மீட்பு!

Intro:tn_vpm_03_sankarapuram_2_child_death_vis_tn10026Body:tn_vpm_03_sankarapuram_2_child_death_vis_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது மூக்கனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், லதா தம்பதியர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் மூக்கனூர் ஏரி அருகே உள்ளது. அசோக் குமார் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு கோவிலுக்கு சென்று விட்ட நிலையில், இன்று லதா தனது குழந்தைகளான அபிராமி வயது 13 திவ்யா வயது 10 ஆனந்த் வயது 7
ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு லதா விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த போது, அபிராமி, திவ்யா, ஆனந்த் ஆகிய மூவரும் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது அபிராமியும் திவ்யாவும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த போது, அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி யுள்ளார்கள். இதைக்கண்ட சகோதரிகளின் தம்பி ஆனந்த் தனது அக்காள்கள் நீரில்மூழ்கி யதைக்கண்டு, கூச்சலிட்டுள்ளான். இதைக்கண்ட லதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஏரிக்குள் மூடிக்கிடந்த சகோதரிகள் அபிராமி, திவ்யாவை மீட்டு பார்த்தபோது அவர்கள் உயிரற்ற நிலையில் இருந்தனர்.இறந்த சகோதரிகள் இருவரது உடலும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.