ETV Bharat / state

அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

author img

By

Published : May 11, 2020, 12:36 PM IST

Updated : May 11, 2020, 12:58 PM IST

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை உயிருடன் எரித்து கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சிறுமியை உயிருடன் எரித்த கொடூரம்
சிறுமியை உயிருடன் எரித்த கொடூரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இன்று இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது.

இதனைக்கண்ட உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீட்டில் சென்றுபார்த்தபோது, அங்கு சிறுமி எரிந்துகொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர், திருவெண்ணெய்நல்லூர் ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், நடந்த சம்பவம் குறித்து குற்றவியல் நீதித் துறை நடுவர் அருண்குமார் ஜெயஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றார்.

அதில், “அந்தக் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் என்னைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்” எனத் தெரிவித்தார். மேலும் அவர், அப்பா எங்கே? எனக் கேள்வி எழுப்பியது கேட்போரை கலங்கவைக்கிறது.

சிறுமியின் வாக்குமூலம்

பின்னர், தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோருக்கும் கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துவந்ததும், இதனால் சிறுமி எரிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இன்று இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது.

இதனைக்கண்ட உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீட்டில் சென்றுபார்த்தபோது, அங்கு சிறுமி எரிந்துகொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர், திருவெண்ணெய்நல்லூர் ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், நடந்த சம்பவம் குறித்து குற்றவியல் நீதித் துறை நடுவர் அருண்குமார் ஜெயஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றார்.

அதில், “அந்தக் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் என்னைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்” எனத் தெரிவித்தார். மேலும் அவர், அப்பா எங்கே? எனக் கேள்வி எழுப்பியது கேட்போரை கலங்கவைக்கிறது.

சிறுமியின் வாக்குமூலம்

பின்னர், தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோருக்கும் கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துவந்ததும், இதனால் சிறுமி எரிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - உயிருடன் வெளிநாடு சென்ற மகன் பிணமாய் வந்த சோகம்

Last Updated : May 11, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.