ETV Bharat / state

25 கிராமங்கள் கள்ளக்குறிச்சியில் இணைக்கும் விவகாரம்: கிராமங்கள் விழுப்புரத்திலேயே தொடரும் என அமைச்சர் பொன்முடி உறுதி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 8:46 PM IST

Minister Ponmudy: விழுப்புரத்தில் உள்ள 25 கிராமங்கள் கள்ளக்குறிச்சியில் இணைக்கும் விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர், இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட 25 கிராமங்கள் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடரும் என கிராம மக்களிடையே அமைச்சர் பொன்முடி உறுதியளித்துள்ளார்.

Minister Ponmudy
விழுப்புரத்தில் உள்ள 25 கிராமங்கள் கள்ளக்குறிச்சியில் இணைக்கும் விவகாரம் - 25 கிராமங்களும் விழுப்புரத்திலேயே தொடரும் என அமைச்சர் பொன்முடி உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் திருவெண்ணெய் நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட 50 ஊராட்சிகளில், 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தாலுகாவிலும், 25 ஊராட்சிகளை திருக்கோவிலூர் தாலுகாவிலும் இனைக்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், தாலுகா அந்தஸ்தைப் பெற்ற பிறகு, 2 தாலுகாக்களிலும் உள்ள 50 ஊராட்சிகள் திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 ஊராட்சி கிராமங்களை மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10ஆம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இருந்த போதிலும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், இருவல்பட்டு பேரங்கியூர், பெரிய செவலை, ஆனத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சி கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் வாய்மொழியாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் இனைந்து, கடந்த ஒரு வாரமாக திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் சாலை மறியல் போராட்டம், அரசு அலுவலகங்களை முற்றுகை இடுவது, வீடுகளில் கருப்பு கொடி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களைச் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.17) விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கூட்டுச் சாலையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழு முன்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் 25 கிராம மக்களின் கருத்துக்கள் கேட்டறிந்தனர்.

இதன் தொடர்ச்சியாகக் கிராம மக்கள் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திலே தொடரும் கள்ளக்குறிச்சியோடு இணைக்கப்படாது என்று உறுதியளித்தார். மேலும் தொகுதி சீரமைப்பு என்பதை மத்திய அரசே முடிவு செய்யும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் திருவெண்ணெய் நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட 50 ஊராட்சிகளில், 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தாலுகாவிலும், 25 ஊராட்சிகளை திருக்கோவிலூர் தாலுகாவிலும் இனைக்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், தாலுகா அந்தஸ்தைப் பெற்ற பிறகு, 2 தாலுகாக்களிலும் உள்ள 50 ஊராட்சிகள் திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் சேர்க்கப்பட்டது. இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 ஊராட்சி கிராமங்களை மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10ஆம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இருந்த போதிலும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், இருவல்பட்டு பேரங்கியூர், பெரிய செவலை, ஆனத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சி கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் வாய்மொழியாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அரசூருக்கு உட்பட்ட 25 ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் இனைந்து, கடந்த ஒரு வாரமாக திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் சாலை மறியல் போராட்டம், அரசு அலுவலகங்களை முற்றுகை இடுவது, வீடுகளில் கருப்பு கொடி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களைச் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.17) விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கூட்டுச் சாலையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழு முன்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் 25 கிராம மக்களின் கருத்துக்கள் கேட்டறிந்தனர்.

இதன் தொடர்ச்சியாகக் கிராம மக்கள் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திலே தொடரும் கள்ளக்குறிச்சியோடு இணைக்கப்படாது என்று உறுதியளித்தார். மேலும் தொகுதி சீரமைப்பு என்பதை மத்திய அரசே முடிவு செய்யும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.