ETV Bharat / state

10 ஆயிரம் ரூபாயை காவலர்களிடம் ஒப்படைத்த முதியவர்!

விழுப்புரம்: ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.10 ஆயிரத்தை காவலர்களிடம் ஒப்படைத்தவரை காவல் கண்காணிப்பாளர் கௌரவித்து பாராட்டினார்.

sp praise
author img

By

Published : Jul 8, 2019, 11:49 PM IST

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் மாதமிருமுறை, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை நேரில் அழைத்து அவர்களின் பணியை பாராட்டி, சான்றிதழ், வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிதல், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் சிறப்பான முறையில் பணியாற்றிய விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், கண்டமங்கலம், திருக்கோவிலூர், பகண்டை, திருவெண்ணை நல்லூர், திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, எடைக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

30 காவலர்களை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டு

மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரையும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கௌரவித்தார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் மாதமிருமுறை, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை நேரில் அழைத்து அவர்களின் பணியை பாராட்டி, சான்றிதழ், வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிதல், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் சிறப்பான முறையில் பணியாற்றிய விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், கண்டமங்கலம், திருக்கோவிலூர், பகண்டை, திருவெண்ணை நல்லூர், திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, எடைக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

30 காவலர்களை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டு

மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரையும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கௌரவித்தார்.

Intro:விழுப்புரம்: மாவட்டத்தில் சமூக அக்கறையோடு சிறப்பாக பணியாற்றிய, பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும், 30 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Body:விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் மாதமிருமுறை, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை நேரில் அழைத்து அவர்களின் பணியை பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிதல், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் சிறப்பான முறையில் பணியாற்றிய விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், கண்டமங்கலம், திருக்கோவிலூர், பகண்டை, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


Conclusion:மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரையும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கௌரவித்தார்.

இந்த நிகழ்வின் போது காவல்துறை தனிபிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.