ETV Bharat / state

சாலைவசதி இல்லாத மலைக்கிராமம்: தலையில் பயணித்த வாக்குஇயந்திரங்கள்

author img

By

Published : Aug 4, 2019, 10:13 PM IST

வேலூர்: சாலைவசதியில்லாத மலைக்கிராமத்திற்கு வாக்குஇயந்திரத்தை தேர்தல் அலுவலர்கள் தலையில் சுமந்து சென்றனர்.

vellore election 2019 vaniyambadi மலை கிராமம் Mountain Village

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று வாக்கு இயந்திரங்கள் அந்த அந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் வாணியம்பாடி தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வட்டாச்சியார் முருகன் மற்றும் தேர்தல் அலுவலர் லூர்து சாமி தலைமையில் சரிபார்க்கப்பட்டு வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது.

வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்படும் காட்சி

இதில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நெக்னாமலை ஊராட்சிக்கு சாலை வசதி இல்லாததால் வாக்கு இயந்திரங்களை அந்த ஊர் மக்களின் உதவியுடன் தேர்தல் அலுவலர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து சென்றனர். மேலும் இடையில் மழை பெய்ததால் சற்று தாமதமாகவே வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றனர். இம்மலைப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று வாக்கு இயந்திரங்கள் அந்த அந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் வாணியம்பாடி தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வட்டாச்சியார் முருகன் மற்றும் தேர்தல் அலுவலர் லூர்து சாமி தலைமையில் சரிபார்க்கப்பட்டு வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது.

வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்படும் காட்சி

இதில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நெக்னாமலை ஊராட்சிக்கு சாலை வசதி இல்லாததால் வாக்கு இயந்திரங்களை அந்த ஊர் மக்களின் உதவியுடன் தேர்தல் அலுவலர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து சென்றனர். மேலும் இடையில் மழை பெய்ததால் சற்று தாமதமாகவே வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றனர். இம்மலைப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது

Intro: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாணியம்பாடியிலிருந்து வட்டாச்சியர் தலைமையில் வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடிக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் எடுத்துச்செல்லப்பட்டது.


Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிற நிலையில் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இதனையடுத்து வாக்கு இயந்திரங்கள், இன்று வாணியம்பாடி வட்டாச்சியர் முருகன் மற்றும் தேர்தல் அதிகாரி லூர்த்த சாமி தலைமையில் வாக்குஇயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் மற்றும் 10 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் வாக்கு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலை ஊராட்சிக்கு அதிகாரிகள் ஊர் மக்களின் உதவியுடன் வாக்கு இயந்திரத்தை தலையில் சுமந்து 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச்சென்றனர்.


Conclusion: மேலும் இடையில் மழை பெய்ததால் சற்று தாமதமாகவே அம்மலைக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச்சென்றனர்.

இம்மலைப்பகுதியிர் சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.