ETV Bharat / state

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

author img

By

Published : Aug 13, 2019, 11:45 AM IST

Updated : Aug 13, 2019, 12:36 PM IST

வேலூர்: திருப்பத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

villagers seige thirupattur police station

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (45). இவர் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, திருவிழா நடைபெற இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும்படி பழனியிடம் ஊர் பொதுமக்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பழனி, அந்த இடம் தனக்கு சொந்தம் எனக்கூறி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி கிராம மக்கள் 12 பேர் மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

திருப்பத்தூர் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றையிடும் காட்சிகள்

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது அங்கு நேரம் பரபரப்பு நிலவியது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (45). இவர் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, திருவிழா நடைபெற இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும்படி பழனியிடம் ஊர் பொதுமக்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பழனி, அந்த இடம் தனக்கு சொந்தம் எனக்கூறி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி கிராம மக்கள் 12 பேர் மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

திருப்பத்தூர் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றையிடும் காட்சிகள்

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது அங்கு நேரம் பரபரப்பு நிலவியது.

Intro:
திருப்பத்தூர் அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையம் பொதுமக்களால் முற்றுகை.


Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(45).

இவர் பல வருடங்களாக அதே பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலங்களில் விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது.

தற்போது ஊர் திருவிழா நெறுங்குவதால், ஊர் மக்கள் ஒன்றிணைந்து பழனியிடம் பண்டிகை செய்ய கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விடும் படி ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

ஆனால் பழனி இந்த இடம் எனக்கு சொந்தம் எனக்கூறி அடாவடியில் ஈடுப்பட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் உதவியுடன் இந்த நிலத்தை அளந்துள்ளனர்.




Conclusion: எனவே கிராம மக்கள் காவல்துறையினர் ஒருதலைபட்சமா செயல்பட்டு ஊரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் கிராம காவல் ஆய்வாளர் மதனலோகன் வழக்கு பதிவு செய்த 12 பேரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Last Updated : Aug 13, 2019, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.