ETV Bharat / state

வேலூரில் ஜெயித்தால் ரெட் லைட் ஏரியா! - அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகள்

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

author img

By

Published : Jul 18, 2019, 4:42 PM IST

வேலூர் தேர்தல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று இன்றுடன் நிறைவுபெறுகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 33 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் கழுத்தில் கொய்யாப் பழ மாலை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்யவந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தியே கொய்யாப் பழ மாலை அணிந்து வந்ததாகக் கூறினார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியிலுள்ள தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரத்தை சந்தித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

செல்லப்பாண்டியனின் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகள்

மேலும், தான் வெற்றிபெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைக்கச் செய்வேனென்றும், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று இன்றுடன் நிறைவுபெறுகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 33 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் கழுத்தில் கொய்யாப் பழ மாலை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்யவந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தியே கொய்யாப் பழ மாலை அணிந்து வந்ததாகக் கூறினார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியிலுள்ள தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரத்தை சந்தித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

செல்லப்பாண்டியனின் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகள்

மேலும், தான் வெற்றிபெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைக்கச் செய்வேனென்றும், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறார்.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்கம் தலைவர் மனு தாக்கல் செய்தார்

Body:வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது இதையொட்டி கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இன்று வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது நேற்று மாலை வரை மொத்தம் 33 பேர் வேலூர் தேர்தலில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் கழுத்தில் கொய்யா பழம் மாலை அணிந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தி கொய்யா பழம் அணிந்ததாக தெரிவித்தார் அவர் இரண்டாவது மாடி உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இவர், தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைக்கச் செய்வேன் ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அதிர்ச்சியூட்டும் வாக்குறுதிகளை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.