ETV Bharat / state

பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர்

வேலூர்: ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

author img

By

Published : Jul 27, 2019, 10:35 PM IST

cm palanisamy

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாணியம்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”யாரால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும், தற்போது யாரால் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.

பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு ஸ்டாலின் பரப்புரை செய்ததால்தான் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவினர் வெற்றிபெற்றனர். விவசாயக் கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொய் வாக்குறுதிகளைக் கூறி அனைவருக்கும் காது குத்திவிட்டார் ஸ்டாலின்.

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் பொய் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றியே திமுக வெற்றி பெற்றது. அவர்கள் எங்களைவிட கொஞ்சம் மட்டுமே வெற்றிபெற்றனர். தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்ற ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நடக்காது.

வாணியம்பாடியில் பரப்புரை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லையென்று ஸ்டாலின் கூறுகிறார். பிறர் எழுதி கொடுத்ததைப் பாத்து பேசும் ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை பாத்திருக்கமாட்டார். அதனால்தான் அவர் அவ்வாறு பேசிவருகிறார்.

திமுக ஆட்சியில் 30 விழுக்காடு மட்டுமே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது 52 விழுக்காடாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் 22 விழுக்காடாக இருந்த குழந்தைகள் இறப்பு, அதிமுக ஆட்சியில் 16 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்காக 254 சுகாதார நிலையங்கள் அமைக்கப்ப்பட்டன.

திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டு மக்கள் கடுமையான மின்வெட்டால் தவித்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்வெட்டில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டது” என்றார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாணியம்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”யாரால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும், தற்போது யாரால் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.

பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு ஸ்டாலின் பரப்புரை செய்ததால்தான் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவினர் வெற்றிபெற்றனர். விவசாயக் கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொய் வாக்குறுதிகளைக் கூறி அனைவருக்கும் காது குத்திவிட்டார் ஸ்டாலின்.

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் பொய் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றியே திமுக வெற்றி பெற்றது. அவர்கள் எங்களைவிட கொஞ்சம் மட்டுமே வெற்றிபெற்றனர். தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்ற ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நடக்காது.

வாணியம்பாடியில் பரப்புரை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லையென்று ஸ்டாலின் கூறுகிறார். பிறர் எழுதி கொடுத்ததைப் பாத்து பேசும் ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை பாத்திருக்கமாட்டார். அதனால்தான் அவர் அவ்வாறு பேசிவருகிறார்.

திமுக ஆட்சியில் 30 விழுக்காடு மட்டுமே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது 52 விழுக்காடாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் 22 விழுக்காடாக இருந்த குழந்தைகள் இறப்பு, அதிமுக ஆட்சியில் 16 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்காக 254 சுகாதார நிலையங்கள் அமைக்கப்ப்பட்டன.

திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டு மக்கள் கடுமையான மின்வெட்டால் தவித்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்வெட்டில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டது” என்றார்.

Intro:
ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் வாணியம்பாடியில் பரப்புரை.


Body: யாரால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் இப்போது யாரால் மறுபடியும் தேர்தல் நடைப்பெறுகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஸ்டாலின் அவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவது போல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்,

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களை விட சற்று கூடுதலாக வெற்றி பெற்றுவிட்டார்கள்.

விவசாய கடன் , கல்விகடன் தள்ளுபடி செய்யும் என்று கூறுகிறார் ஆட்சியில் இருந்தால் தானே தள்ளுபடி செய்ய முடியும் ஆட்சியில் இல்லாமலேயே குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்,

அவர் இத்தனை நாள் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்று கனவு கண்டுவருகிறார் அது ஒரு போதும் நடக்காது.

மேலும் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்த வில்லையென்று கூறுகிறார் பிறர் எழுதி கொடுத்து படிப்பவர்களுக்கு எங்கு நாங்கள் செய்யும் நலத்திட்டங்களை காண முடியும், என கூறினார்.

மேலும் ஓர் மாநில முன்னேற வேண்டுமானால் குழந்தைகள் தரமான கல்வி பயில வேண்டும் அதனால் தமிழக அரசு தமிழக மாணவர்கள் விஞ்ஞானரீதியாக கல்வி கற்க 43 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கியுள்ளோம்.

திமுக ஆட்சியில் 30% சதவீதம் மட்டுமே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இருந்தது, ஆனால் இப்போது 52% சதவீதம் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் அம்மா ஆட்சியில் குடிசையில்லா தமழகம் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார் அது படிப்படியாக நிறைவேற்றி தமிழகம் குடிசையில்லா மாநிலமாக மாறும்.

மேலும் 22% குழந்தைகள் இறப்பு சதவீதம் அதிமுக ஆட்சியில் 16% சதவீதமாக குறைந்துள்ளது இதற்காக 254 சுகாதார நிலையம் அமைக்கப்பெற்றது.

மேலும் திமுக ஆட்சியில் 10,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கி தமிழகம் கடுமையான மின்வெட்டில் தவித்தது,

ஆனால் அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்து மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றியது அதிமுக அரசு.

மேலும் 304 புரிணந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும்.

மேலும் இஸ்லாமியர்களுக்கு அரணாக விளங்கும் அரசு அதிமுக சாதி மத சண்டையின்றி தமிழகம் விளங்குகிறது.


Conclusion: மேலும் இக்கூட்டத்தில் பல அமைச்சர் கலந்து கொண்டனர்.

மேலும் பேசிய அவர் மக்களிடையே உண்மையை கூறி அதை செய்யும் அரசு அம்மா அரசு பொய் கூறியே ஆட்சியமைப்பவர்கள் திமுகவினர் அதனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.