ETV Bharat / state

இரட்டை சகோதரிகள் ஒரே அறையில் தற்கொலை!

author img

By

Published : May 20, 2020, 2:34 PM IST

வேலூர்: காட்பாடியில் 12ஆம் வகுப்பு படித்த இரட்டை சகோதரிகள் இருவரும் வீட்டிற்குள் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தற்கொலை செய்துகொண்ட சகோதிரிகள்
தற்கொலை செய்துகொண்ட சகோதிரிகள்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் தனியார் கட்டட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு மகன், இரட்டை மகள்கள் உள்ளனர்.

மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவரும் நிலையில் இரட்டை சகோதரிகள் பத்மபிரியா, அரிபிரியா இருவரும் காட்பாடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கான வகுப்பு இணையம் மூலம் தொடங்கிய நிலையில் நேற்று காலை (19.05.2020) வழக்கம்போல் சகோதரிகள் இருவரும் பள்ளி ஆசிரியர் இணைய வழியில் பாடம் நடத்துவதாகவும் கல்வி கற்பதற்காக செல்வதாகவும் கூறிவிட்டு செல்ஃபோன் ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளர்.

மாலை நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை தட்டி திறக்கக் கூறியுள்ளனர். உள்ளே எவ்வித சத்தமும் வராததால் தந்தை பாலசுப்பிரமணி கதவை உடைத்து உள்ளே சென்றார். சகோதரிகள் இருவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ந்துபோனார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், சகோதிரிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் தெரிய வராததால் மாணவிகள் ஆன்லைன் வகுப்புக்காக பயன்படுத்திய ஒரு செல்ஃபோன், அவர்களது புத்தக பையை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையின் காரணமாக சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளின் பெற்றோர், சகோதரனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் தனியார் கட்டட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு மகன், இரட்டை மகள்கள் உள்ளனர்.

மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவரும் நிலையில் இரட்டை சகோதரிகள் பத்மபிரியா, அரிபிரியா இருவரும் காட்பாடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கான வகுப்பு இணையம் மூலம் தொடங்கிய நிலையில் நேற்று காலை (19.05.2020) வழக்கம்போல் சகோதரிகள் இருவரும் பள்ளி ஆசிரியர் இணைய வழியில் பாடம் நடத்துவதாகவும் கல்வி கற்பதற்காக செல்வதாகவும் கூறிவிட்டு செல்ஃபோன் ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளர்.

மாலை நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை தட்டி திறக்கக் கூறியுள்ளனர். உள்ளே எவ்வித சத்தமும் வராததால் தந்தை பாலசுப்பிரமணி கதவை உடைத்து உள்ளே சென்றார். சகோதரிகள் இருவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ந்துபோனார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், சகோதிரிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் தெரிய வராததால் மாணவிகள் ஆன்லைன் வகுப்புக்காக பயன்படுத்திய ஒரு செல்ஃபோன், அவர்களது புத்தக பையை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையின் காரணமாக சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளின் பெற்றோர், சகோதரனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.