ETV Bharat / state

எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு - சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - Thiruppathur bullfighting ceremony

திருப்பத்தூர்: எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி தர மறுத்த உதவி ஆட்சியரை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சார் ஆட்சியர்  அலுவலகம் முற்றுகை
சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
author img

By

Published : Jan 29, 2020, 9:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் வருகின்ற 31ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற இருந்தது. இப்பகுதியில் எருது விடும் திருவிழாவானது கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் 31ஆம் தேதி நடக்கும் எருது விடும் திருவிழாவிற்கு திருப்பத்தூர் உதவி ஆட்சியரிடம் அனுமதி கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தனர். அதற்கு அவர் அப்பகுதியின் அருகில் ரயில்வே தண்டவாளம் உள்ளதால் வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதனை அடுத்து காலங்காலமாக இந்தப் பகுதியில்தான் எருது விடும் திருவிழா நடத்தி வருகிறோம் எனவும் ஆகையால் இந்த பகுதியில்தான் அனுமதி தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், இதற்கு அனுமதி வழங்காவிட்டால் தங்களுடைய குடியுரிமை சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்துவிடுவோம் எனவும் கூறிச் சென்றனர்.

இச்சம்பவத்தினால் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரசு நெல் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் வருகின்ற 31ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற இருந்தது. இப்பகுதியில் எருது விடும் திருவிழாவானது கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் 31ஆம் தேதி நடக்கும் எருது விடும் திருவிழாவிற்கு திருப்பத்தூர் உதவி ஆட்சியரிடம் அனுமதி கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தனர். அதற்கு அவர் அப்பகுதியின் அருகில் ரயில்வே தண்டவாளம் உள்ளதால் வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதனை அடுத்து காலங்காலமாக இந்தப் பகுதியில்தான் எருது விடும் திருவிழா நடத்தி வருகிறோம் எனவும் ஆகையால் இந்த பகுதியில்தான் அனுமதி தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், இதற்கு அனுமதி வழங்காவிட்டால் தங்களுடைய குடியுரிமை சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்துவிடுவோம் எனவும் கூறிச் சென்றனர்.

இச்சம்பவத்தினால் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரசு நெல் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

Intro:Body:திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி தர மறுத்த உதவி ஆட்சியரை கண்டித்து சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் வருகின்ற 31 தேதி பொங்கல் திருவிழாவையொட்டி எருது விடும் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

கடந்த 8ஆண்டுகளாக எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. நிலையில் 31ஆம் தேதி நடக்கும் எருது விடும் திருவிழா நிகழ்ச்சிக்காக திருப்பத்தூர் சப் கலெக்டரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளதால் அந்த இடத்தில் அனுமதி மறுத்து வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காலம் காலமாக இந்தப் பகுதியில்தான் எருது விடும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் ஆகையால் நாங்கள் இந்த பகுதியில்தான் அனுமதி தரவேண்டும் என்று கூறி திருப்பத்தூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள்பெண்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு அதே இடத்தில் அனுமதி வழங்காவிட்டால் தங்களுடைய குடியுரிமைச் சான்றிதழ்,குடும்ப அட்டை,ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைத்து எங்களுக்கு அரசு செலவில் ஏதும் வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தினால் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.