ETV Bharat / state

‘இருமொழிக் கொள்கை தான் எங்களது லட்சியம்’ - செங்கோட்டையன்

வேலூர்: இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் இருக்கும், அதுவே எங்களின் லட்சியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

author img

By

Published : Jul 30, 2019, 5:24 PM IST

vellore

வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் நமக்கு வழங்கக்கூடிய நிதியை நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை. எனவே நிதி எங்களுக்கு தேவை என்று கேட்கும் போது மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. பிறகு எப்படி ஸ்டாலின் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று புரியவில்லை. ஏனென்றால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது இதுவரை நான்கு ஆண்டுகாலம் எங்களுக்கு நிதியே வரவில்லை. அப்படி இருக்கும்போது அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று கூறுவது தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறினார்.

இருமொழிக் கொள்கை தான் எங்களது லட்சியம்

தொடர்ந்து பேசிய அவர், எந்த மேடையில் வேண்டுமானாலும் ஸ்டாலின் சொல்லட்டும் நாங்கள் நேரடியாக வந்து பதில் கூறுகிறோம். நாகரிகம் என்பதை எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனவே நாங்கள் நாகரிகத்தோடு பேசி வருகிறோம் என்றார்.

அதையடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை பொறுத்தவரை அண்ணா சொல்லிக்கொடுத்தது, 'யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்கும் போது பிறர் மனம் புண்படும்படி கருத்துகள் வெளிப்படக் கூடாது' என்பது எங்கள் லட்சியப் பயணம். இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எங்களது லட்சியம். இதற்காகத்தான், கடந்த மாதம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார் இருமொழிக் கொள்கை தான் எங்களது உயிர் மூச்சு" என்று தெரிவித்தார்.

வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் நமக்கு வழங்கக்கூடிய நிதியை நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை. எனவே நிதி எங்களுக்கு தேவை என்று கேட்கும் போது மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. பிறகு எப்படி ஸ்டாலின் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று புரியவில்லை. ஏனென்றால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது இதுவரை நான்கு ஆண்டுகாலம் எங்களுக்கு நிதியே வரவில்லை. அப்படி இருக்கும்போது அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று கூறுவது தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறினார்.

இருமொழிக் கொள்கை தான் எங்களது லட்சியம்

தொடர்ந்து பேசிய அவர், எந்த மேடையில் வேண்டுமானாலும் ஸ்டாலின் சொல்லட்டும் நாங்கள் நேரடியாக வந்து பதில் கூறுகிறோம். நாகரிகம் என்பதை எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனவே நாங்கள் நாகரிகத்தோடு பேசி வருகிறோம் என்றார்.

அதையடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை பொறுத்தவரை அண்ணா சொல்லிக்கொடுத்தது, 'யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்கும் போது பிறர் மனம் புண்படும்படி கருத்துகள் வெளிப்படக் கூடாது' என்பது எங்கள் லட்சியப் பயணம். இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எங்களது லட்சியம். இதற்காகத்தான், கடந்த மாதம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார் இருமொழிக் கொள்கை தான் எங்களது உயிர் மூச்சு" என்று தெரிவித்தார்.

Intro:Body:தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று பிரசாரத்தின்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசிடமிருந்து நிதியே வராதபோது எப்படி அதை திருப்பி அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் இன்ளு பிரச்சாரம் மேற்கொண்டபோது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், " அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் நமக்கு வழங்கக் கூடிய நிதியை 3 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை எனவே நிதி எங்களுக்கு தேவை என்று கேட்கும் போது மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை பிறகு எப்படி ஸ்டாலின் இவ்வாறு சொல்கிறார் என்பது புரியவில்லை ஏன் என்றால் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது இதுவரை 4 ஆண்டுகாலம் எங்களுக்கு நிதியே வரவில்லை அப்படி இருக்கும்போது அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று கூறுவது தேவையற்ற குற்றச்சாட்டு அவர் எந்த மேடையில் வேண்டுமானாலும் சொல்லட்டும் நாங்கள் நேரடியாக வந்து பதில் பதில் கூறுகிறோம். நாகரிகம் என்பதை எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனவே நாங்கள் நாகரிகத்தோடு பேசி வருகிறோம். திராவிட இயக்கத்தின் வரலாற்றை பொறுத்தவரை அண்ணா சொல்லிக்கொடுத்தது, யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்கும் போது பிறர் மனம் புண்படும்படி கருத்துக்கள் வெளிப்படக் கூடாது என்பது எங்கள் லட்சிய பயணம். இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எங்களது இலட்சியப் பயணம் இதற்காகத்தான் கடந்த மாதம் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார் இருமொழிக்கொள்கை தான் எங்களது உயிர் மூச்சு" என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.