வேலூர் கோட்டை அகழியில் சடலம் மதிப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கு காவல் துறையினர், அழுகிய நிலையிலிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்,"இறந்தவர் சுடிதார், லெக்கின்ஸ் உடை அணிந்திருப்பதால் திருநங்கையாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
இதையும் படிங்க: கல்யாண ஆசையில் காதலியை மிரட்டிய காதலன்!