ETV Bharat / state

Robbery: பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

author img

By

Published : Dec 15, 2021, 4:20 PM IST

Updated : Dec 15, 2021, 6:11 PM IST

Robbery: வேலூரில் பிரபல நகைக் கடையில் நுழைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

வேலூர்(Robbery News): மாவட்டத்தின் முக்கியப் பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகைக் கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இந்த நகைக் கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று(டிச 14) இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று (டிச 15) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி எ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் கடையில் உள்ள நகைகளை எடைபோடும் பணியையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகைக் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை போன நகைக் கடைக்கு அருகில் தடயங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் 'ஒரு தலை விக்' ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Robbery: பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
கடையில் உள்ள இருப்பு நகைகளைப் பல முறை கணக்கிடும் பணியில் டிஐஜி எ.ஜி பாபு ஈடுபட்டுள்ளார். மேலும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காவல் துறையினரும் களத்தில் இறங்கி கொள்ளையர்களை சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மூன்று டிஎஸ்பி மற்றும் ஒரு ஏஎஸ்பி தலைமையிலான நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது. மேலும் கொள்ளையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவனா அல்லது வடநாட்டை சேர்ந்தவனா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபடும்போது சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடித்துவிட்டுதிருடியுள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க: 80 மாற்றுத்திறனாளிகள் கைது!

வேலூர்(Robbery News): மாவட்டத்தின் முக்கியப் பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகைக் கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இந்த நகைக் கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று(டிச 14) இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று (டிச 15) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி எ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் கடையில் உள்ள நகைகளை எடைபோடும் பணியையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகைக் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை போன நகைக் கடைக்கு அருகில் தடயங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் 'ஒரு தலை விக்' ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Robbery: பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
கடையில் உள்ள இருப்பு நகைகளைப் பல முறை கணக்கிடும் பணியில் டிஐஜி எ.ஜி பாபு ஈடுபட்டுள்ளார். மேலும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காவல் துறையினரும் களத்தில் இறங்கி கொள்ளையர்களை சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மூன்று டிஎஸ்பி மற்றும் ஒரு ஏஎஸ்பி தலைமையிலான நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது. மேலும் கொள்ளையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவனா அல்லது வடநாட்டை சேர்ந்தவனா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபடும்போது சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடித்துவிட்டுதிருடியுள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க: 80 மாற்றுத்திறனாளிகள் கைது!

Last Updated : Dec 15, 2021, 6:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.