ETV Bharat / state

'வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும்தான்' - பன்வாரிலால் புரோகித்

author img

By

Published : Jan 20, 2020, 4:41 PM IST

வேலூர்: வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும்தான் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Governor Panwarilal Brokit
Governor Panwarilal Brokit

வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "ஆசிரியர்களுக்கு கருணை, புரிதல், உருவாக்குதல் ஆகிய மூன்றும் முக்கிய மாண்புகளாகும்.

ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிய வாழ்க்கைக்கு பணம் தேவைப்படாது. எனவே, மாணவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆரம்ப வாழ்க்கைதான். அதன்பின் அவர் உயர்ந்த பதவியிலிருந்தும் தன்னுடைய வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியபோது

வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும் முக்கியமானதுதான். எனவே நேரத்தின் முக்கியத்துவம், மனித மாண்புகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வாழும் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரிஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "ஆசிரியர்களுக்கு கருணை, புரிதல், உருவாக்குதல் ஆகிய மூன்றும் முக்கிய மாண்புகளாகும்.

ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிய வாழ்க்கைக்கு பணம் தேவைப்படாது. எனவே, மாணவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆரம்ப வாழ்க்கைதான். அதன்பின் அவர் உயர்ந்த பதவியிலிருந்தும் தன்னுடைய வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியபோது

வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும் முக்கியமானதுதான். எனவே நேரத்தின் முக்கியத்துவம், மனித மாண்புகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வாழும் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரிஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Intro:வேலூர் மாவட்டம்.

ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒளிவு, மறைவு இன்றி வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு.Body:வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய ஆளுநர்,
ஆசிரியர்களுக்கு கருணை, புரிதல், உருவாக்குதல் இவை மூன்றும் முக்கிய மாண்புகளாகும். இவைதான் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியவையாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வெளிப்படைத்தன்மையாக இருந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆசிரியர்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழும் போது அதிக அளவில் பணம் தேவைப்படாது. மாணவர்களிடம் எளிமையான வாழ்க்கை வாழ அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆரம்பத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து பின்பு உயர்ந்த பதவியில் அவர் இருந்தார். ஆனாலும் தன்னுடைய வாழ்க்கையில் எளிமையின் உருவமாக திகழ்ந்தார் .
வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல நேரமும் விலைமதிக்க முடியாதது. எனவே நேரத்தின் முக்கியத்துவம் மனித மாண்புகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதன்மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த பாதையை அமைத்துக் கொள்வார்கள். பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது ஒரு மணி நேரம் ஆளுமைத்திறன் வளர்க்க நேரம் ஒதுக்கவேண்டும். மாணவர்களுக்கு அன்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்தவேண்டும். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வாழும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.