ETV Bharat / state

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு: இறுதிச் சடங்குக்கு பணம் வழங்கி நெகிழ வைத்த எஸ்ஐ!

author img

By

Published : Dec 30, 2019, 7:38 PM IST

திருப்பத்தூர்: சடலமாக மீட்கப்பட்ட காணாமல்போன சிறுவனின் இறுதிச் சடங்கிற்கு பணமில்லாமல் தவித்த அவனது பெற்றோருக்கு காவல் ஆய்வாளர் பணம் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

student
student

திருப்பத்தூர் மாவட்டம் களர்பதி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பலராமன்( 13) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று அதே பகுதியில் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் இறந்தநிலையில் மிதந்துள்ளார். இதை கண்ட சிறுவனின் உறவினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வளார் மதனலோகன் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினரிடம் இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், காவல்துறை ஆய்வாளர் மதனலோகன் இறுதி சடங்கிற்காக நிதியுதவி வழங்கினார்.

இதையும் படிங்க:ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்டம் களர்பதி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பலராமன்( 13) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று அதே பகுதியில் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் இறந்தநிலையில் மிதந்துள்ளார். இதை கண்ட சிறுவனின் உறவினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வளார் மதனலோகன் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினரிடம் இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், காவல்துறை ஆய்வாளர் மதனலோகன் இறுதி சடங்கிற்காக நிதியுதவி வழங்கினார்.

இதையும் படிங்க:ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

Intro:Body:திருப்பத்தூர் அருகே மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு.

ஏழை குடும்பத்திற்கு காவல்துறை ஆய்வாளர் நிதியுதவி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் பலராமன்( 13) வயது இவர் அதே பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில் இன்று அதே பகுதியில் குரும்பேரி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார் இதனையடுத்து இன்று காலை மாணவனின் அண்ணன் நல்லதம்பி அவ்வழியாக செல்லும் போது சடலம் இருப்பதை கண்டு உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் திருப்பத்தூர் கிராமிய போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறை ஆய்வளார் மதனலோகன் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் இறந்த மாணவனின் குடும்பம் மிகவும் ஏழை குடும்பம் என தெரிய வந்ததால் திருப்பத்தூர் கிராிமிய காவல்துறை ஆய்வாளர் மதனலோகன் இறுதி சடங்கிற்காக நிதியுதவி செய்தார் இதனால் அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.