ETV Bharat / state

வேலூரில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்... இதுதான் காரணமா?

author img

By

Published : Apr 3, 2019, 4:07 PM IST

வேலுார்: புதிய பேருந்து நிலையத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான நில விவகாரம் தொடர்பான இடத்திற்கு, அதில் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டே்ட அதிபர் ஜெயபிரகாஷ் சென்றார். இதனால் அங்கு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

landproblem

வேலுார் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் தரப்புக்கும், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு தரவேண்டிய கமிஷன் பணத்தை தரவில்லை எனக்கூறி ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பினர் மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று திடீரென்று ஜெயபிரகாஷ் சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு சென்றார். இதனையறிந்த அமைச்சர் ஆதரவாளர்களும் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வேலுார் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

வேலுாரில் 300 கோடி ரூபாய் நில விவகாரம்

அப்போது, ஜெயபிரகாஷிடம் இன்ஸ்பெக்டர் திருமால், 'இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நான் அதை விசாரித்து வருகையில், எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் பிரச்னை வேறுமாதிரி ஆகிவிடும்' என எச்சரித்தார்.

அதற்கு ஜெயபிரகாஷ் இது தனது நிலம், நான் ஏன் இங்கிருந்து செல்லவேண்டும் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் ஒருவழியாக ஜெயபிரகாஷை சமாதானம் செய்து காவல் துறையினர் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.


வேலுார் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் தரப்புக்கும், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு தரவேண்டிய கமிஷன் பணத்தை தரவில்லை எனக்கூறி ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பினர் மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று திடீரென்று ஜெயபிரகாஷ் சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு சென்றார். இதனையறிந்த அமைச்சர் ஆதரவாளர்களும் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வேலுார் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

வேலுாரில் 300 கோடி ரூபாய் நில விவகாரம்

அப்போது, ஜெயபிரகாஷிடம் இன்ஸ்பெக்டர் திருமால், 'இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நான் அதை விசாரித்து வருகையில், எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் பிரச்னை வேறுமாதிரி ஆகிவிடும்' என எச்சரித்தார்.

அதற்கு ஜெயபிரகாஷ் இது தனது நிலம், நான் ஏன் இங்கிருந்து செல்லவேண்டும் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் ஒருவழியாக ஜெயபிரகாஷை சமாதானம் செய்து காவல் துறையினர் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.


Intro:300 கோடி நில விவகாரம்

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் போலீஸ் குறைக்கப்பட்டதால் பரபரப்பு


Body:வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி ஜெயபிரகாஷ் தரபப்புக்கும் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது அதாவது இந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு தர வேண்டிய கமிஷன் தொகையை தரவில்லை எனக் கூறி ஜெயபிரகாஷ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது இந்த வழக்கில் தன்னை அமைச்சர் கே சி வீரமணி தரப்பினர் மிரட்டுவதாகவும் ஜெயப்பிரகாஷ் குற்றம்சாட்டியிருந்தார் இந்த நிலையில் இன்று திடீரென சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ஜெயப்பிரகாஷ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்து அமைச்சர் கே சி வீரமணி ஆதரவாளர்களும் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயப்பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர் திடீரென போலீஸ் குவிக்கப்பட்டதால் வேலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சம்பவத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றனர் அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் திருமால் ஜெயப்பிரகாசை பார்த்து, இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் இதுதொடர்பாக நீங்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நான் விசாரணை நடத்தி வருகிறேன் அப்படியிருக்கும்போது எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள் இங்கிருந்து கிளம்புங்கள் இல்லை என்றால் பிரச்சினை வேறு மாதிரி ஆகிவிடும் என எச்சரித்தார் அதற்கு ஜெயபிரகாஷ் இது எனது நிலம் நான் ஏன் இங்கிருந்து செல்ல வேண்டும் என போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடித்தது இதையடுத்து ஒரு வழியாக ஜெயப்பிரகாசை சமாதானம் செய்து போலீசார் அங்கிருந்த அனுப்பி வைத்தனர்


Conclusion:அமைச்சர் கே சி வீரமணி சம்பந்தப்பட்ட இந்த நிலம் சர்ச்சையில் பிரச்சனை நீடித்து வருவதால் வேலூரில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.